தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் மேகபதி கௌதம் ரெட்டியின் மறைவுக்கு ஆந்திர அரசு இரண்டு நாள் துக்கம் அறிவித்துள்ளது.
பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு துக்கத்தின்போது பொது பொழுதுபோக்கு எதுவும் இருக்காது.
திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு ஆகிய துறைகளையும் வகித்த கௌதம் ரெட்டி, திங்களன்று ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்.
இறுதிச் சடங்குகள், அவரது சொந்த ஊரான நெல்லூர் மாவட்டத்தில், காவல்துறை மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
மாநில செயலகத்தில் உள்ள அவரது அறையில், அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், பல அரசியல் தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய் வெற்றியைக் கொண்டாடிய கேரள ரசிகர்கள்!

நீதிக் கதைகள்! புதிய யோசனை!

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108

நாளை ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்! ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்!
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


