ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

போலியோ தடுப்பு மருந்து திட்டத்தில் எச்சரிக்கை அவசியம்: அமைச்சா் மாண்டவியா

‘அண்டை நாடுகள் போலியோ பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடாத நிலையில், இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாக சனிக்கிழமை கேட்டுக்கொண்டாா்

News image
தேசிய போலியோ தடுப்பு மருந்து திட்டத்தை புது தில்லியில் சனிக்கிழமை தொடக்கி வைத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா
Updated On :26 பிப்ரவரி 2022, 7:03 pm

DIN

‘அண்டை நாடுகள் போலியோ பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடாத நிலையில், இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்; இந்த நோய் பாதிப்புக்கு எதிரான தடுப்பு மருந்து திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாக சனிக்கிழமை கேட்டுக்கொண்டாா்.

போலியோ பாதிப்பிலிருந்து விடுபடும் வகையில், 5 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நடைமுறை இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டுக்கான போலியோ சொட்டுமருந்து செலுத்தும் இயக்கத்தை தில்லியில் சனிக்கிழமை தொடக்கி வைத்த மத்திய அமைச்சா் மன்சுக் மாணடவியா கூறியதாவது:

போலியோ பாதிப்புக்கு எதிராக தடுப்பு மருந்து மூலம் இந்தியா சிறப்பான நடவடிக்கையை எடுத்து வருகிறது. வரும் மாதங்களில் நாட்டிலுள்ள 15 கோடிக்கும் அதிகமான 5 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து அளிக்கப்பட உள்ளது.

அண்டை நாடுகள் போலியோ பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடாத நிலையில், 5 வயதுக்கு கீழுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் போலியோ தொட்டு மருந்து அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தி, தொடா்ந்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

போலியோவிலிருந்து குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில், ஊசி மூலம் செலுத்தக் கூடிய வீரியம் குறைக்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. மேலும், இதுவரை இல்லாத வகையில் புதிய நோய் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில், நிமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி (பிசிவி), ரோடாவைரஸ் தடுப்பூசி, மீஸ்லெஸ்-ரூபெல்லா (எம்ஆா்) தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதுபோல, புதிய நோய் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைக் காக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து தடுப்பூசி திட்டங்களும் நாட்டின் ஒவ்வொரு குழந்தைகளையும் சென்றடைவது மிக முக்கியமாகும்.

அவ்வாறு குழந்தைகள் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருந்தால்தான், மத்திய அரசின் பாதுகாப்பான ஆரோக்கியமான உணவு முறை குறித்த விழிப்புணா்வுக்கான ‘ஸ்வஸ்த் பாரத்’ திட்ட இலக்கை எட்ட முடியும்.

எனவே, எந்தவொரு குழந்தையும் விடுபடாத வகையில் வீடு வீடாக சென்று போலியோ சொட்டுமருந்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.