குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உக்ரைனில் சிக்கியுள்ள பஞ்சாபியர்கள் தொடர்புகொள்ள உதவி எண்கள் அறிவிப்பு

உக்ரைனில் சிக்கியுள்ள பஞ்சாபியர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை அறிவித்துள்ளது பஞ்சாப் அரசு. 

News image
கோப்புப்படம்
Updated On :26 பிப்ரவரி 2022, 5:21 am

DIN

உக்ரைனில் சிக்கியுள்ள பஞ்சாபியர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை அறிவித்துள்ளது பஞ்சாப் அரசு. 

நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர்ச்சூழல் நிலவி வந்தது. இந்த சூழ்நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷிய அதிபர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார். இரு நாள்களாக நடைபெற்ற தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. ரஷிய தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது. எனினும் தொடர்ந்து ரஷியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருவதாகக் கூறியுள்ளது. 

உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டினரை, மாநிலத்தவரை மீட்க அரசுகள் முழு முயற்சி எடுத்து வருகின்றன. 

மத்திய அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள பஞ்சாபியர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை அறிவித்துள்ளது பஞ்சாப் அரசு. 

இதற்காக பஞ்சாபில் 24*7 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள மக்கள் 1100 என்ற இலவச எண்ணுக்கும் இந்தியாவுக்கு வெளியே உள்ளவர்கள் +91-172-4111905 என்ற எண்ணுக்கும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உக்ரைனில் சிக்கியுள்ள பஞ்சாபியர்களை பாதுகாப்பாக மீட்க கோரிக்கை விடுத்தார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு ஐ.நா. அமைப்பு மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.