அது மட்டுமல்ல, உக்ரைனின் எல்லைத் தாண்டி இந்திய மாணவர்கள் வருவதற்கு, இந்திய தூதரகம் தரப்பில், உக்ரைன் அதிகாரிகளிடம் எந்த முறையீடும் செய்யப்படவில்லை. நாங்கள் உக்ரைனைக் கடந்து போலந்து எல்லைக்குள் நுழைந்த பிறகுதான் இந்திய தூதரக அதிகாரிகளையே பார்க்க முடிந்தது. ஆனால், உக்ரைனில் இந்திய தூதரக அதிகாரிகள் எங்குமே இல்லை. உக்ரைனிலிருந்து எல்லையை வந்தடையும் இளைஞர்களை உக்ரைன் காவலர்கள் மிக மோசமாக நடத்துகிறார்கள். நான் மட்டுமே எல்லைத் தாண்டி வந்துள்ளேன். எனது சகோதரன் மற்றும் அவனது நண்பர்கள் மீண்டும் கல்லூரி விடுதிக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். அங்குதான் நிலைமை மிக மோசமாக உள்ளது என்கிறார் கௌர்.