குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரஷியாவுக்கு எதிராக வாக்களிக்காததால் .. உக்ரைன் காவலர்கள் தாக்கியதாக இந்திய மாணவர்கள் புகார்

ஐக்கிய நாடுகள் சபை ரஷியாவுக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காததால், உக்ரைன் காவலர்கள் தங்களை மோசமாக நடத்துவதாக இந்திய மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

News image
உக்ரைன் காவலர்கள் தாக்கியதாக இந்திய மாணவர்கள் புகார்
Updated On :28 பிப்ரவரி 2022, 6:05 am

DIN

புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபை ரஷியாவுக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காததால், உக்ரைன் காவலர்கள் தங்களை மோசமாக நடத்துவதாக இந்திய மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உக்ரைன் - போலந்து எல்லைப் பகுதியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பிய இந்திய மாணவர்கள் பலரும், தங்களை உக்ரைன் காவலர்கள் மோசமாக நடத்தியதாகவும் அவமரியாதை செய்ததாகவும் கூறியுள்ளனர்.

உக்ரைன் - போலந்து நாட்டு எல்லையில், கடுங்குளிரில் சுமார் 72 மணி நேரம் சிக்கியிருந்த இந்திய மாணவர்கள் பலரும், உக்ரைன் காவலர்களால் அடித்து, உதைக்கப்பட்டதாகவும், சில மாணவர்களின் செல்லிடப்பேசிகளை அவர்கள் பிடுங்கிக் கொண்டதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாணவர் சந்தீப் கௌர் கூறுகையில், ஆரம்பத்தில் எல்லைத் தாண்டி போலந்து செல்ல மாணவர்களை உக்ரைனியர்கள் அனுமதித்து வந்தனர். சில நேரம் கழித்து, யாரையும் போலந்து நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

நான் எனது சகோதரன் மற்றும் நண்பர்களுடன் வெகு நேரம் காத்திருந்தோம். முதலில் எங்கள் அனைவரையும் வரிசையாக நிற்குமாறு கூறினார்கள். நாங்களும் நின்றிருந்தோம். பிறகு பெண்களை தனி வரிசையில் நிற்குமாறு கூறினார்கள். என்னை மட்டும் எல்லைத் தாண்டிச் செல்ல அனுமதித்தார்கள். அப்போது அதே வரிசையில் நின்றிருந்த எனது சகோதரர் தானும் வரிசையில் நின்றிருப்பதாகவும், எல்லைத் தாண்டிச் செல்ல அனுமதிக்குமாறும் கோரினார். ஆனால் அவரை காவலர்கள் அடித்து உதைத்தனர் என்கிறார் கௌர்.

அது மட்டுமல்ல, உக்ரைனின் எல்லைத் தாண்டி இந்திய மாணவர்கள் வருவதற்கு, இந்திய தூதரகம் தரப்பில், உக்ரைன் அதிகாரிகளிடம் எந்த முறையீடும் செய்யப்படவில்லை. நாங்கள் உக்ரைனைக் கடந்து போலந்து எல்லைக்குள் நுழைந்த பிறகுதான் இந்திய தூதரக அதிகாரிகளையே பார்க்க முடிந்தது.  ஆனால், உக்ரைனில் இந்திய தூதரக அதிகாரிகள் எங்குமே இல்லை. உக்ரைனிலிருந்து எல்லையை வந்தடையும் இளைஞர்களை உக்ரைன் காவலர்கள் மிக மோசமாக நடத்துகிறார்கள். நான் மட்டுமே எல்லைத் தாண்டி வந்துள்ளேன். எனது சகோதரன் மற்றும் அவனது நண்பர்கள் மீண்டும் கல்லூரி விடுதிக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். அங்குதான் நிலைமை மிக மோசமாக உள்ளது என்கிறார் கௌர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.