உத்தரகண்ட்: ருத்ரபிரயாக் கிராமத்தில் மீண்டும் நிலச்சரிவு

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் கிராமத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில், ஏராளமான மாட்டு கொட்டகைகள், கழிவறைகள் சேதமடைந்தன.
உத்தரகண்ட்: ருத்ரபிரயாக் கிராமத்தில் மீண்டும் நிலச்சரிவு
உத்தரகண்ட்: ருத்ரபிரயாக் கிராமத்தில் மீண்டும் நிலச்சரிவு


ருத்ரபிரயாக்: உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் கிராமத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில், ஏராளமான மாட்டு கொட்டகைகள், கழிவறைகள் சேதமடைந்தன. கிராமத்திலிருந்து 12க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ருத்ரபிரயாக்கின் மலைக் கிராமமான ஜலிமத்தில் இன்று காலை நேரிட்ட நிலச்சரிவினால், பல இடங்கள் சரிந்துவிழுந்தன. அலக்னந்தா ஆற்றின் கரையோரம் நூறு மீட்டர் தூரம் அளவுக்கு இந்த நிலச்சரிவு நேரிட்டுள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நிலச்சரிவு மழையால் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சில இடங்களில் நிலச்சரிவு நேரிட்டு வருவதாகவும், பாதுகாப்புக் கருதி அங்கு வசித்துவந்த 12 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com