புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

உத்தரகண்ட்: ருத்ரபிரயாக் கிராமத்தில் மீண்டும் நிலச்சரிவு

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் கிராமத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில், ஏராளமான மாட்டு கொட்டகைகள், கழிவறைகள் சேதமடைந்தன.

News image

உத்தரகண்ட்: ருத்ரபிரயாக் கிராமத்தில் மீண்டும் நிலச்சரிவு

Updated On :28 பிப்ரவரி 2022, 12:13 pm


ருத்ரபிரயாக்: உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் கிராமத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில், ஏராளமான மாட்டு கொட்டகைகள், கழிவறைகள் சேதமடைந்தன. கிராமத்திலிருந்து 12க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ருத்ரபிரயாக்கின் மலைக் கிராமமான ஜலிமத்தில் இன்று காலை நேரிட்ட நிலச்சரிவினால், பல இடங்கள் சரிந்துவிழுந்தன. அலக்னந்தா ஆற்றின் கரையோரம் நூறு மீட்டர் தூரம் அளவுக்கு இந்த நிலச்சரிவு நேரிட்டுள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நிலச்சரிவு மழையால் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சில இடங்களில் நிலச்சரிவு நேரிட்டு வருவதாகவும், பாதுகாப்புக் கருதி அங்கு வசித்துவந்த 12 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.