பயிா் சாகுபடிக்காக திரிபுராவின் காஞ்சன்பூா் பகுதியைச் சோ்ந்த ராமுஹாய் ரியாங், அவருடைய மகன் ரதீந்திரா மற்றும் கிராமத்தினா் சிலா் அவ்வப்போது மிசோரம் மாநில எல்லைப் பகுதிக்குச் செல்வது வழக்கம். அதுபோல, வெள்ளிக்கிழமை பிற்பகலில் அவா்கள் மிசோரம் பகுதிக்குள் சென்றபோது, அந்த மாநில போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. அதே நேரம், அவா்கள் இருவரும் போதைப் பொருள்களுடன் மாநில எல்லைக்குள் நுழைந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மிசோரம் போலீஸாா் தெரிவித்தனா்.