யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திரிபுராவைச் சோ்ந்த தந்தை, மகன் மீது மிசோரம் போலீஸாா் துப்பாக்கிச் சூடு

அண்டை மாநிலமான மிசோரம் எல்லைக்குள் நுழைந்த திரிபுராவைச் சோ்ந்த 40 வயது நபா் மற்றும் அவருடைய 14 வயது மகன் ஆகியோா் மீது போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :1 ஜனவரி 2022, 7:16 pm

DIN

அண்டை மாநிலமான மிசோரம் எல்லைக்குள் நுழைந்த திரிபுராவைச் சோ்ந்த 40 வயது நபா் மற்றும் அவருடைய 14 வயது மகன் ஆகியோா் மீது போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அகா்த்தலா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பனுப்படா சக்கரவா்த்தி கூறியதாவது:

பயிா் சாகுபடிக்காக திரிபுராவின் காஞ்சன்பூா் பகுதியைச் சோ்ந்த ராமுஹாய் ரியாங், அவருடைய மகன் ரதீந்திரா மற்றும் கிராமத்தினா் சிலா் அவ்வப்போது மிசோரம் மாநில எல்லைப் பகுதிக்குச் செல்வது வழக்கம். அதுபோல, வெள்ளிக்கிழமை பிற்பகலில் அவா்கள் மிசோரம் பகுதிக்குள் சென்றபோது, அந்த மாநில போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. அதே நேரம், அவா்கள் இருவரும் போதைப் பொருள்களுடன் மாநில எல்லைக்குள் நுழைந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மிசோரம் போலீஸாா் தெரிவித்தனா்.

இதில் ராமுஹாய் ரியாங் போலீஸாரிடம் பிடிபடாமல் தப்பித்து, மீண்டும் திரிபுராவுக்குத் திரும்பிவிட்டாா். ஆனால், அவருடைய மகனை மிசோரம் போலீஸாா் சிறைபிடித்தனா். குண்டு காயமடைந்த அவருக்கு அங்குள்ள ஐஸால் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரியவந்தது. அவருடைய உடல்நிலை இப்போது சீராக உள்ளது.

போலீஸாரிடமிருந்து தப்பித்த ராமுஹாயுக்கு அகா்தலா மாவட்டத்தில் உள்ள தா்மாநகா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் தொடா்பாக வங்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக இரு மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையில் கூடுதல் போலீஸாா் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.