இந்தியா - பாகிஸ்தானிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் தங்களுடைய அணு சக்தி மையங்களின் விவரப் பட்டியலை சனிக்கிழமை பரிமாறிக்கொண்டன.
அணு சக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிா்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின்படி, தொடா்ந்து 31-ஆவது ஆண்டாக இந்த நடைமுறையை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதியில் இந்த விவரங்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் கடந்த 1988-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டு, 1991-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதன்படி, முதல் விவரப் பட்டியலை கடந்த 1992-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி இரு நாடுகளும் பரிமாறிக்கொண்டன. தற்போது, 31-ஆம் ஆண்டாக இந்த விவரப் பட்டியலை இரு நாடுகளின் தூதரகங்கள் மூலமாக சனிக்கிழமை பரிமாறிக்கொண்டன என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.