11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

மூன்று நாள்களுக்குப் பின் திறக்கப்பட்ட ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் (விடியோ)

டிசம்பர் 31ஆம் தேதி முதல் கடந்த மூன்று நாள்களாக மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற ஸ்ரீஜெகந்நாதர் கோயில் இன்று காலை பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறக்கப்பட்டது.

News image

மூன்று நாள்களுக்குப் பின் திறக்கப்பட்ட ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் (விடியோ)

Updated On :3 ஜனவரி 2022, 12:10 pm


புரி: டிசம்பர் 31ஆம் தேதி முதல் கடந்த மூன்று நாள்களாக மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற ஸ்ரீஜெகந்நாதர் கோயில் இன்று காலை பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறக்கப்பட்டது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, புத்தாண்டு நாளில், அதிக பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீஜெகந்நாதர் கோயில் டிசம்பர் 31ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் மூடப்பட்டிருந்தது.

ஆனால், கோயிலில் அன்றாடம் நடைபெற வேண்டிய பூஜைகள், பூசாரிகள் மற்றும் சேவார்த்திகள் மூலமாக தொடர்ந்து மூன்று நாள்களும் நடைபெற்று வந்தது. அதுபோல, கோயில் முழுவதும் சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

கோயிலில் பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, சுவாமியை தரிசனம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் வெகுச் சிறப்பாக செய்யப்பட்டு, இன்று மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.