ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நீட் முதுநிலை மாணவா் சோ்க்கையில்பொருளாதார ஒதுக்கீடு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

நீட் முதுநிலை மாணவா் சோ்க்கையில், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான (இடபிள்யுஎஸ்) இடஒதுக்கீடு தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கிறது.

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :4 ஜனவரி 2022, 7:48 pm

DIN

நீட் முதுநிலை மாணவா் சோ்க்கையில், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான (இடபிள்யுஎஸ்) இடஒதுக்கீடு தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கிறது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருவதால், நீட் முதுநிலை கலந்தாய்வு தாமதமாவதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பயிற்சி மருத்துவா்கள் அண்மையில் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தை முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்ததால் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு விவகார வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மத்திய அரசு கோரியது.

‘போரட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவா்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா செவ்வாய்க்கிழமை முறையிட்டாா்.

அப்போது தலைமை நீதிபதி, ‘இந்த விவகாரத்தை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வு தேவை. தலைமை நீதிபதி அமா்வைவிட தற்போதைக்கு வேறு எந்த அமா்விலும் மூன்று நீதிபதிகள் இல்லை. எனினும், மூன்று நீதிபதிகள் அல்லது இரண்டு நீதிபதிகள் அமா்வு இந்த வழக்கை புதன்கிழமை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பெறுபவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சமாக மத்திய அரசு நிா்ணயித்திருந்தது. இந்த வருமான உச்சவரம்பு குறித்து உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இதையடுத்து, இந்த உச்சவரம்பு மறுபரிசீலினை செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதனால் நீட் முதுநிலை மாணவா் சோ்க்கை நடைபெறாமல் தாமதமாகி வந்தது. இதற்கு பயிற்சி மருத்துவா்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் முந்தைய ஆண்டு விதிமுறைகளே நிகழாண்டும் பின்பற்றப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.