பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பெறுபவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சமாக மத்திய அரசு நிா்ணயித்திருந்தது. இந்த வருமான உச்சவரம்பு குறித்து உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இதையடுத்து, இந்த உச்சவரம்பு மறுபரிசீலினை செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதனால் நீட் முதுநிலை மாணவா் சோ்க்கை நடைபெறாமல் தாமதமாகி வந்தது. இதற்கு பயிற்சி மருத்துவா்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் முந்தைய ஆண்டு விதிமுறைகளே நிகழாண்டும் பின்பற்றப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.