47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கரோனா

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :6 ஜனவரி 2022, 1:57 pm

DIN


ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:

"இன்று மாலை கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளன. மற்ற எந்தப் பிரச்னையும் கிடையாது. என்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்."

அசோக் கெலாட்டுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கெலாட் மகன் மற்றும் காங்கிரஸ் தலைவருமான வைபவ் கெலாட்டுக்கு புதன்கிழமை தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. வைபவ் கெலாட் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் உள்ளார். அவரும் தனக்கு தொற்று பாதிப்பு இருப்பதை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.