திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மத்திய அமைச்சர் பாரதி பவாருக்கு கரோனா பாதிப்பு

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பவாருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:53 am

PTI


மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பவாருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பதிவில் கூறியது, 

கரோனா சோதனை மேற்கொண்டதில் தனக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது, இதையடுத்து வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன் 

கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டு, கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள திண்டோரி மக்களவை உறுப்பினராக உள்ளவர் பவார். இந்த வாரத் தொடக்கத்தில், தெற்கு மும்பையைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் அரவிந்த் சாவந்த், மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏ வித்யா தாக்கூர் ஆகியோருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த வாரம், மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், மாநிலத்தில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்எல்ஏக்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.