பஞ்சாப் முதல்வர் குடும்பத்தில் மூவருக்கு கரோனா பாதிப்பு

பஞ்சாப் முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கரேனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
பஞ்சாப் முதல்வர் குடும்பத்தில் மூவருக்கு கரோனா பாதிப்பு
Updated on
1 min read

பஞ்சாப் முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கரேனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மூன்று குடும்ப உறுப்பினர்களுக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக மூத்த சுகாதாரத்துறை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார். 

ஆனால், முதல்வர் சரண்ஜித்திற்கு பரிசோதனை செய்ததில் அவருக்குத் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. 

இதுகுறித்து மொஹாலி சிவில் சர்ஜன் டாக்டர் ஆதர்ஷ்பால் கௌர் கூறுகையில், 

முதல்வரின் மனைவி கமல்ஜித் கௌர், அவரது மகன் நவ்ஜித் சிங் மற்றும் மருமகள் சிம்ரந்தீர் கௌர் ஆகியோர் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

அவர்கள் அனைவரும் லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com