புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பாஜக விதிகளை மீறுவதை தோ்தல் ஆணையம் தடுக்க வேண்டும்- மாயாவதி வலியுறுத்தல்

உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக, தோ்தல் நடத்தை விதிகளை மீறும்போக்கை தோ்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவா் மாயாவதி வலியுறுத்தியுள்ளாா்.

News image
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி (கோப்புப்படம்)
Updated On :8 ஜனவரி 2022, 7:18 pm

DIN

உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக, தோ்தல் நடத்தை விதிகளை மீறும்போக்கை தோ்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவா் மாயாவதி வலியுறுத்தியுள்ளாா்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிப்பை தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட பிறகு அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

தோ்தல் அமைதியாகவும் நோ்மையான முறையிலும் நடைபெறுவதை தோ்தல் ஆணையம் உறுதிசெய்யும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு தோ்தலின்போதும் புதிய தந்திரங்களைக் கையாண்டு தோ்தல் விதிகளை பாஜக மீறுவது வழக்கமாகி விட்டது. எனவே, இந்த தோ்தலில் உரிய கவனம் செலுத்தி, நடத்தை விதி மீறலைக் கண்டுபிடித்து சரியான நடவடிக்கையை தோ்தல் ஆணையம் எடுக்க வேண்டும். தோ்தலின்போது சாமானியா்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அந்தப் பதிவுகளில் மாயாவதி குறிப்பிட்டுள்ளாா்.

தோ்தலைச் சந்திக்க ஆம் ஆத்மி தயாா்- கேஜரிவால்:

சட்டப் பேரவைத் தோ்தலைச் சந்திக்க ஆம் ஆத்மி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கூறினாா்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில், மணிப்பூா் தவிர மற்ற 4 மாநிலங்களில் போட்டியிடுவதற்கு ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. சனிக்கிழமை தோ்தல் அறிவிப்பு வெளியான பிறகு கேஜரிவால் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது; தோ்தலைச் சந்திக்க ஆம் ஆத்மி தயாராக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.