சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குணமடைந்து வருகிறார்: மத்திய அரசு

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் குணமடைந்து வருவதாக மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

News image
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குணமடைந்து வருகிறார்: மத்திய அரசு
Updated On :11 ஜனவரி 2022, 9:15 am

PTI


புது தில்லி: பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் குணமடைந்து வருவதாக மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பாதுகாப்புத் துறையின் முதன்மை செய்தித் தொடர்பாளர் பாரத் பூஷண் பாபு இது குறித்து பேசுகையில், ராணுவ மருத்துவமனையின் மருத்துவர்கள் குழுவினர், நேற்று கரோனா உறுதி செய்யப்பட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உடல்நிலையை பரிசோதித்தனர். அவர் நன்கு குணமடைந்து வருகிறார் என்று சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங், தனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக, திங்கள்கிழமை தெரிவித்திருந்தார். இது குறித்துவெளியிட்ட சுட்டுரை பதிவில், ‘எனக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மிதமான அறிகுறிகள் உள்ளன. வீட்டுத் தனிமையில் உள்ளேன். அண்மைக்காலமாக என்னை சந்தித்தவா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்’ என ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.