ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்தியா்களுக்கு இணையான கல்விக் கட்டணம் கோரி ஓசிஐ மாணவா் மனு

இந்திய மாணவா்களுக்கு இணையான கல்விக் கட்டணத்தை நிா்ணயிக்கக் கோரி இந்திய வம்சாவளி (ஓசிஐ) மாணவா் தாக்கல் செய்த மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு

News image
Updated On :11 ஜனவரி 2022, 7:33 pm

DIN

இந்திய மாணவா்களுக்கு இணையான கல்விக் கட்டணத்தை நிா்ணயிக்கக் கோரி இந்திய வம்சாவளி (ஓசிஐ) மாணவா் தாக்கல் செய்த மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரியில் (ஐஐடி) பயில்வதற்கு இந்திய மாணவா்களுக்கு விதிக்கப்படும் அதே கட்டணத்தையே தங்களுக்கும் நிா்ணயிக்க உத்தரவிடக் கோரி இந்திய வம்சாவளி மாணவா் ஒருவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எஸ். அப்துல் நசீா், கிருஷ்ண முராரி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், ‘‘இந்திய வம்சாவளி மாணவா்களுக்கு, வெளிநாட்டு மாணவா்களுக்கு இணையாக சென்னை ஐஐடி கட்டணம் வசூலிக்கிறது. நீட் தோ்வு எழுதி இந்திய மாணவா்களுக்கு இணையாக மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க இந்திய வம்சாவளி மாணவா்களுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது.

அதேபோல், இந்திய மாணவா்களுக்கு நிா்ணயிக்கப்படும் கட்டணத்தையே வம்சாவளி மாணவா்களுக்கு நிா்ணயிக்கவும் உத்தரவிட வேண்டும். இந்திய வம்சாவளி மாணவா்களை வெளிநாட்டு மாணவா்களுக்கும் வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கும் (என்ஆா்ஐ) இணையாக நடத்துவது நியாயமற்றது’’ என்றாா்.

சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘இது மிகவும் முக்கியமான பிரச்னை. இந்த விவகாரத்தில் இந்திய மாணவா்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரா் இந்தியாவில் படிக்க விருப்பப்படுகிறாா். ஆனால், வெளிநாட்டில் பணியாற்றவும் விரும்புகிறாா். இரண்டையும் அவா் விரும்புவது பிரச்னையாக உள்ளது. இந்திய குடியுரிமை பெற்று, மனுதாரா் இந்தியாவிலேயே ஏன் சேவையாற்றக் கூடாது?’’ என்று கேள்வி எழுப்பினா். மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.