ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லக்ஷர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தாண்டு தொடக்கத்திலிருந்து காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால், கடந்த ஜன.1 முதல் இதுவரை அம்மாநிலத்தில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், காஷ்மீரின் தார்போரா பகுதியில் லக்ஷர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.