ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேட்பாளா்களின் குற்றப் பின்னணியைவெளிப்படுத்தக் கோரிய வழக்கு: விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

வேட்பாளா்கள் மீதான குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் வெளியிடுவதை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு

News image
உச்சநீதிமன்றம்
Updated On :18 ஜனவரி 2022, 8:50 pm

DIN

வேட்பாளா்கள் மீதான குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் வெளியிடுவதை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த மனுவை தாக்கல் செய்துள்ள வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய், தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமா்வு முன் செவ்வாய்க்கிழமை ஆஜராகி, ‘ஐந்து மாநில தோ்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளும், வேட்பாளா்களும் உச்சநீதிமன்றத்தின் இரு உத்தரவுகளை அப்பட்டமாக மீறி வருகின்றனா். ஆகையால், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் இந்த மனுவை விசாரிக்க வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி அமா்வு, ‘இதுகுறித்து பரிசீலிக்கப்படும். வழக்கு விசாரணைக்கான தேதி அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்தது.

வேட்பாளா்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் தங்களின் இணையதளத்தில் வெளியிடுவதுடன், பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றிலும் இந்தத் தகவல்கள் வெளியாவதை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளரை தோ்வு செய்வதற்கான காரணத்தையும் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் வழக்குரைஞா் அஷ்வினி உபாத்யாய் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

சமாஜவாதி கட்சியின் சாா்பில் உத்தர பிரதேசத்தின் கய்ரானா தொகுதியில் போட்டியிடும் இருமுறை எம்எல்ஏவான நஹித் ஹசன், கடந்த 11 மாதங்களுக்கு முன்பு குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தாா். அவரது குற்றப் பின்னணி குறித்த விவரங்களை வெளியிடாத சமாஜவாதி கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிரிமினல்கள் தோ்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாவது ஜனநாயகத்துக்கும், மதச்சாா்பின்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.