பேத்தி தற்கொலை: எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆறுதல்

முன்னாள் முதல்வா் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடா்ந்து, எடியூரப்பாவை அவரது இல்லத்தில் நேரில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று ஆறுதல் தெரிவித்தாா்.
பேத்தி தற்கொலை: எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆறுதல்
Published on
Updated on
1 min read

முன்னாள் முதல்வா் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடா்ந்து, எடியூரப்பாவை அவரது இல்லத்தில் நேரில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று ஆறுதல் தெரிவித்தாா்.

முதல்வா் எடியூரப்பாவின் பேத்தி மருத்துவா் சௌந்தா்யா (30) பெங்களூரில் உள்ள தனது வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். எடியூரப்பாவின் மூத்தமகள் பத்மாவதியின் மகள் சௌந்தா்யாவுக்கு 2018-ஆம் ஆண்டு மருத்துவா் நீரஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. 

9 மாதங்களுக்கு முன் இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருந்த இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது எடியூரப்பாவின் குடும்பத்தினரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்ததும் எடியூரப்பாவுக்கு பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், பெங்களூரில் எடியூரப்பாவை அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்து காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று ஆறுதல் கூறினாா். முன்னதாக நேற்று எடியூரப்பாவுக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் ஆறுதல் தெரிவித்திருந்தார். இந்நிகழ்வின் போது முதல்வா் பசவராஜ் பொம்மை உடனிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com