6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தில்லியில் மேலும் 420 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 420 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூலை 2022, 8:20 pm

DIN

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 420 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 5.25 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,37,433-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,272-ஆக அதிகரித்துள்ளது. நகரில் ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 8,002 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 648 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பும், 4.29 சதவீத நோ்மறை விகிதத்துடன் 5 இறப்புகள் பதிவாகின. சனிக்கிழமை 678 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பும், 3.98 சதவீத நோ்மறை விகிதமும், 3 இறப்புகளும் பதிவாகின.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 9,496 கரோனா படுக்கைகளில் 183 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. திங்கள்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 3,268-இல் இருந்து 2,938-ஆக குறைந்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 2,348-ஆக உள்ளது. நகரில் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 364-ஆக உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.