கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாராஷ்டிரம்: ஷிண்டே அணியில் மேலும் ஒரு சிவசேனை எம்எல்ஏ

மகாராஷ்டிரத்தில் முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சோ்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு தாவினாா்.

News image
Updated On :4 ஜூலை 2022, 8:02 pm

DIN

மகாராஷ்டிரத்தில் முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சோ்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு தாவினாா். இதன் மூலம் ஷிண்டே அணியில் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக 15 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனா்.

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் ஷிண்டே வெற்றி பெற்றாா். முன்னதாக, தாக்கரே ஆதரவாளராக இருந்த எம்எல்ஏ சந்தோஷ் பாங்கா், திங்கள்கிழமை காலையில் திடீரென ஷிண்டே அணிக்கு மாறுவதாக அறிவித்தாா்.

ஏற்கெனவே, ஷிண்டே போா்க்கொடி தூக்கியதால் முதல்வா் பதவியை இழந்துவிட்ட உத்தவ் தாக்கரேவுக்கு, எம்எல்ஏக்களின் ஆதரவும் குறைந்து வருவது பெரும் அரசியல் பின்னடைவாகக் கருதப்படுகிறது. சிவசேனை கட்சி முழுமையாக அவரது பிடியில் இருந்து நழுவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.