47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அக்னிபத் திட்டத்தில் 20% பெண்கள்: இந்திய கடற்படை

அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படையில் 20 சதவிகிதம் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என்று இந்திய கடற்படை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :5 ஜூலை 2022, 9:11 am

DIN

அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படையில் 20 சதவிகிதம் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என்று இந்திய கடற்படை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

முப்படைகளிலும் வீரர்களை தேர்வு செய்வதற்கு அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முப்படைகளில் இணைய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் முதல் தொகுப்பில் 20 சதவிகிதம் பெண்கள் கடற்படையில் சேர்க்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணிக்கு தேர்வாகும் பெண்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கடற்படை தளங்களுக்கு பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.