அக்னிபத் திட்டத்தில் 20% பெண்கள்: இந்திய கடற்படை

அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படையில் 20 சதவிகிதம் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என்று இந்திய கடற்படை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படையில் 20 சதவிகிதம் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என்று இந்திய கடற்படை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

முப்படைகளிலும் வீரர்களை தேர்வு செய்வதற்கு அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முப்படைகளில் இணைய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் முதல் தொகுப்பில் 20 சதவிகிதம் பெண்கள் கடற்படையில் சேர்க்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணிக்கு தேர்வாகும் பெண்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கடற்படை தளங்களுக்கு பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com