கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரில் ஐடிபிபி துணை ஆய்வாளர் தற்கொலை

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ஐடிபிபி அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Published on

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ஐடிபிபி அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ITBP) உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்ட பிரேம் சந்த், பூஞ்ச் டவுனில் உள்ள மினி செயலகத்தில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவக்கியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com