தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி 198.65 கோடி

இந்தியாவில் இதுவரை 198.65 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :9 ஜூலை 2022, 6:49 pm

DIN

இந்தியாவில் இதுவரை 198.65 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, 198.65 கோடிக்கும் அதிகமான (1,98,65,36,288) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,60,37,032 அமா்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 193.53 கோடிக்கும் அதிகமான (1,93,53,58,865) கரோனா தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும், மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமாகவும் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 10.42 கோடிக்கும் அதிகமான (10,42,14,590) தடுப்பூசி டோஸ்கள் இருப்பில் உள்ளன.

12 வயது முதல் 14 வயதிற்கு உள்பட்டவா்களில், 3.74 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 18,840 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,25,028-ஆக உள்ளது. பெருந்தொற்றில் இருந்து இதுவரை மொத்தம் 4,29,53,980 போ் குணமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.