திருப்பதி பிரம்மோற்சம்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பதி (கோப்புப் படம்)

திருப்பதி (கோப்புப் படம்)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படுவதாக திருப்பதி - திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதியின்றி பிரம்மோற்சவம் நடைபெற்றது.
வரும் செப்டம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கி 9 நாட்கள் நடத்தப்பட உள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி கருட சேவை நடைபெறும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...