திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படுவதாக திருப்பதி - திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதியின்றி பிரம்மோற்சவம் நடைபெற்றது.
வரும் செப்டம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கி 9 நாட்கள் நடத்தப்பட உள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி கருட சேவை நடைபெறும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.