விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது: அமித் ஷா

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :13 ஜூலை 2022, 9:42 am

புது தில்லி: உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  நிகழ்ச்சியொன்றில் மேலும் பேசியதாவது:

உலக நாடுகளுடம் ஒப்பிடும்போது இந்தியா பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகமாக உள்ளது. இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நமது அண்டை நாடுகளில் உள்ள நிலைமையைக் காட்டிலும் இந்தியாவில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சுரங்கத் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் விளைவாக நாட்டில் கனிமங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சுரங்க ஏலத்தில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வந்துள்ளதுள்ளதால்,  மத்திய அரசு ஊழலுக்கு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது என்று அமித தா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.