
சார்ஜாவில் இருந்து கேரளம் வந்த ஏர் அரேபியா விமானம் கொச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சார்ஜாவில் இருந்து 222 பயணிகள், 7 பணியாளர்களுடன் கேரளம் வந்த ஏர் அரேபியா விமானம் கொச்சி விமான நிலையத்தில் இன்று மாலை அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹைட்ராலிக் பழுது காரணமாக விமானத்தின் என்ஜின் ஆஃப் செய்யப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று கொச்சி சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது. கொச்சியில் விமானம் தரையிறக்கப்பட்டு நிலைமை சீரானவுடன் இரவு 8.22 மணியளவில் முதல் இண்டிகோ விமானம் சென்னை புறப்பட்டுச் சென்றது.
இதனால் கொச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.