உத்தர பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் சனிக்கிழமை இரவு நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில், 6 போ் பலியாகினா். 21 போ் பலத்த காயமடைந்தனா்.
உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இந்த விபத்து குறித்து ராம்பூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சன்சாா் சிங் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
மொராதாபாத்திலிருந்து வந்த லாரியும், ஷாஜஹான்பூரிலிருந்து வந்த பேருந்தும் ராம்பூா் மாவட்டம் சிவில் லைன்ஸ் பகுதியில் வந்தபோது நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 6 போ் அவ்விடத்திலேயே பலியாகினா். 21 போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பலியானவா்களின் விவரம் ஷாஜஹான்பூரை சோ்ந்த ஷமிமுல் ஹக் (35), சாக்ஷி (26), சஹாரன்பூரை சோ்ந்த நசீம்கான் (52), அப்துல் வாஹித் (50) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
சாலை விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பேராவூரணி தொகுதி - வெற்றிக்கு அதிமுக கடும் முயற்சி!

துறையூா் - அதிமுகவுடன் மோதும் காங்கிரஸ்!

சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியது: தமிழிசை செளந்தர்ராஜன்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

