டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஹைதராபாத்தில் 13 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது

கடந்த 4 ஆண்டுகளில் ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த 13 பெண்களை திருமணம் செய்த நபர் சைபராபாத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:51 am

DIN

ஹைதராபாத்:  கடந்த 4 ஆண்டுகளில் ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த 13 பெண்களை திருமணம் செய்த நபர் சைபராபாத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடப்பா சிவசங்கர் பாபு என்பவர் விவாகரத்து பெற்ற பெண்களை திருமணம் செய்து கொண்டு, அவர்களிடம் பணம் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த அடப்பா சிவசங்கர் பாபு (35)  குற்றம் சாட்டப்பட்ட நபர், விவாகரத்து பெற்ற பணக்காரப் பெண்களைக் குறிவைத்து, திருமண சேவை வலைதளங்களில் வரன்தேடி வந்தார். போலியான விவாகரத்து பத்திரங்களை தயாரித்து, அந்த பெண்களுக்கு புது வாழ்வு தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார்.

ஹைதராபாத், ரச்சகொண்டா, சங்கரெட்டி, குண்டூர், விஜயவாடா மற்றும் அனந்தபூர் ஆகிய இடங்களில் வழக்குப் பதிவு செய்த குற்றவாளியை சைபராபாத் காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள கச்சிபௌலி காவல் துறையினர் கைது செய்தனர்.

சிவசங்கர் பாபு  ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை எடுத்துச் சென்றதாகவும், அதைத் திருப்பித் தரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் ராமச்சந்திரபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தன்பேரில் பிறகு கைது அவர் செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 420 இன் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.