மகாராஷ்டிரத்தில் 142 பேருக்கு பன்றிக் காய்ச்சல், 7 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இந்தாண்டு ஜூலை வரை பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.  
மகாராஷ்டிரத்தில் 142 பேருக்கு பன்றிக் காய்ச்சல், 7 பேர் பலி
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தில் இந்தாண்டு ஜூலை வரை பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 

பொது சுகாதாரத் துறையின் அறிக்கையின்படி, 

மாநிலத்தில் சில பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. புணேவில் 2, கோலாப்பூரில் 3, தாணேவில் 2 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

இந்தாண்டு தொடக்கத்திலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 142 பன்றிக் காய்ச்சல் பதிவாகியுள்ளன. 

மும்பையில் மட்டும் 43 பேருக்கு இன்ப்ளூயன்ஸா A H1N1 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புணே, பால்கர் மற்றும் நாசிக்கில் முறையே 23, 22 மற்றும் 17 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

காய்ச்சல் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது, ஆனால் ஏற்கனவே நோயுற்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com