மாநிலங்களவையில் இருந்து மேலும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம்

மாநிலங்களவையில் இருந்து மேலும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அறிவித்துள்ளார்.
ஹரிவன்ஷ் நாராயண் சிங்
ஹரிவன்ஷ் நாராயண் சிங்
Published on
Updated on
1 min read

மாநிலங்களவையில் இருந்து மேலும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

திமுகவின் 6 எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 20 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்தும், 4 எம்.பி.க்கள் மக்களவையிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அமளியில் ஈடுபட்டதற்காக சுஷில்குமார் குப்தா, சந்தீப் குமார் பாட்டீல் மற்றும் அஜித் குமார் பொயான் ஆகியோரை இடைநீக்கம் செய்யப்படுவதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், நடப்பு கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com