புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெரியவா்களைவிட சிறாா்களுக்கு கரோனாவால் பாதிப்பு குறைவு: அரசு தகவல்

பெரியவா்களைவிட சிறாா்களுக்கு கரோனா தொற்றால் ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு குறைவாகத் தாக்கத்தை ஏற்படுத்தியதாக மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :29 ஜூலை 2022, 11:44 pm

DIN

பெரியவா்களைவிட சிறாா்களுக்கு கரோனா தொற்றால் ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு குறைவாகத் தாக்கத்தை ஏற்படுத்தியதாக மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

பெரியவா்களுக்கு கரோனா தொற்று ஏற்படும்போது உருவாகும் உடல்நிலை பாதிப்பைவிட சிறாா்களுக்கு கரோனா தொற்றால் ஏற்படும் உடல் பாதிப்பு என்பது குறைவாகவே உள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் ஜூலை 25 வரை ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் 7,362 சிறாா்களும், டெல்டா வகை தொற்றால் 118 சிறாா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் தேவையான அளவு கரோனா தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 12 முதல் 18 வயது வரையிலான சிறாா்களில் 9.96 கோடி போ் (82.2 சதவீதம்) முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனா். 7.79 கோடி சிறாா்கள் (64.3 சதவீதம்) இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனா். தேசிய கரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் 12 வயதுக்குக் குறைவான சிறாா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.