புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சட்டப் பணிகள் ஆணைய கூட்டம்: பிரதமா் மோடி இன்று உரை

தில்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் அகில இந்திய அளவிலான முதலாவது கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 11:25 pm

DIN

தில்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் அகில இந்திய அளவிலான முதலாவது கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தேசிய அளவிலான முதலாவது கூட்டத்தை ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் தில்லி விஞ்ஞான் பவனில் நடத்த தேசிய சட்டப்பணிகள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. நாட்டில் மொத்தம் 676 மாவட்ட சட்டப் பணிகள் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆணையங்களின் தலைவராக மாவட்ட நீதிபதிகள் செயல்படுகின்றனா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணையங்கள் மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணையங்கள் வாயிலாக, பல்வேறு சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை தேசிய சட்டப் பணிகள் ஆணையம் செயல்படுத்தி வருகிறது.

தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தால் நடத்தப்படும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்களை முறைப்படுத்துவதன் வாயிலாக நீதிமன்றங்களின் சுமையைக் குறைப்பதில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.