கேரளத்தின் 3 மாவட்டங்களில் தலைதூக்கும் அபாயம்

கேரள மாநிலத்தின் எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோட்டயம் ஆகிய மூன்று மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
கேரளத்தின் 3 மாவட்டங்களில் தலைதூக்கும் அபாயம்
கேரளத்தின் 3 மாவட்டங்களில் தலைதூக்கும் அபாயம்
Updated on
1 min read


திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோட்டயம் ஆகிய மூன்று மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

ஆனாலும், கவலைப்பட ஒன்றும் இல்லை என்று அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் கரோனா குறித்த உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த வீணா ஜார்ஜ், தற்போது, மாநிலத்தில் கரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று அதிகமாக பரவுவதே இதற்குக் காரணம்.

இந்த கூட்டத்தில் கரோனா பரவல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் அதிகமாக பரவி வருகிறது. இந்த மாவட்டங்களுக்கு மட்டும் அதிக கவனம் தேவைப்படுகிறது. கரோன அறிகுறி இருப்பவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com