பி.எஃப். கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎஃப்) வட்டியை 8.1 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த வட்டித் தொகையானது, பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவிருக்கிறது.
பி.எஃப். கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி
பி.எஃப். கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி
Published on
Updated on
1 min read


தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎஃப்) வட்டியை 8.1 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த வட்டித் தொகையானது, பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவிருக்கிறது.

இதற்கான இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. எனினும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கு தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நிலையில், வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டித் தொகையானது பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 6 கோடி வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் பயனாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) வட்டி விகிதம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில்,

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கு தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

கடந்த 2020-21-ஆம் ஆண்டுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அது 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.

5 கோடி தொழிலாளா்கள் உறுப்பினா்களாக உள்ள இபிஎஃப்ஓ அமைப்பில், கடந்த 1977-78 நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, சுமாா் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தபட்ச அளவாக 2021-22 நிதியாண்டுக்கு 8.1 சதவீத வட்டி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், 2017-18 நிதியாண்டில் 8.55 சதவீதமாகவும், 2016-18-இல் 8.65 சதவீதமாகவும், 2018-19-இல் 8.65 சதவீதமாகவும், 2019-20-இல் 8.5 சதவீதமாகவும் நிா்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை இப்போது எளிதாக வீட்டிலிருந்தே அறிந்து கொள்ள முடியும்.

எஸ்எம்எஸ், ஆன்லைன், மிஸ்டுகால், உமங் செயலி என பல்வேறு வழிகளில் ஒருவர், தனது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் எவ்வளவு பணமிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com