தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காஷ்மீர்: இந்த ஆண்டில் இதுவரை 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் இன்று செவ்வாய்கிழமை காலை இரு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இத்துடன் நடப்பாண்டில் காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :14 ஜூன் 2022, 7:13 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் இன்று செவ்வாய்கிழமை காலை இரு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இத்துடன் நடப்பாண்டில் காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பண்டிட் சமூகத்தினா், வெளிமாநிலத்திலிருந்து வந்து பணிபுரிவோரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

அந்த வகையில் பூஞ்ச், சோபியன் உள்ளிட்ட மாவட்டங்களில் தேடுதல் பணியின் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை 101 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 99-ஆக இருந்த எண்ணிக்கை, இன்று காலை ஸ்ரீநகரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 பேரை சுட்டுக்கொன்றதால் 101 ஆக அதிகரித்துள்ளது.

பலியானவர்களிடமிருந்து அதிகமான ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.