அயோத்திக்கு செல்ல லக்னௌ வந்தார் ஆதித்ய தாக்கரே

மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரே புதன்கிழமை லக்னௌவில்  உள்ள ராமர் கோயிலை தரிசிக்க அயோத்திக்கு வந்துள்ளார். 
Maharashtra Minister Aaditya Thackeray on his arrival at the airport in Lucknow
Maharashtra Minister Aaditya Thackeray on his arrival at the airport in Lucknow
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரே புதன்கிழமை லக்னௌவில்  உள்ள ராமர் கோயிலை தரிசிக்க அயோத்திக்கு வந்துள்ளார். 

முதல் முறையாக அயோத்திக்கு தாக்கரே வருகை தருகின்றார். இதையடுத்து அவர் ராமர் கோயிலில் வழிபாடு செய்வார். மேலும் சரயு நதிக்கரையில் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்பார். 

ஒரு நாள் பயணமாக அயோதிக்கு வந்த அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின் செய்தியாளர்களையும் சந்திக்கிறார். 

காலை 11 மணியளவில் லக்னௌவுக்கு வந்த தாக்கரே அங்கிருந்து சாலை வழியாக அயோத்தியை அடைந்தார்.

தாக்கரேவின் வருகைக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட மூத்த சேனா தலைவர் சஞ்சய் ராவுத் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் செவ்வாய்கிழமை அயோத்தியை அடைந்தனர்.

முன்னதாக, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே ஜூன் 5ஆம் தேதி அயோத்திக்கு வருவதாக அறிவித்தார், அது பின்னர் ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com