இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அமர்நாத் யாத்திரை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் 

அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ள நிலையில், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் சனிக்கிழமை சரிபார்த்தனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:33 am

DIN

அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ள நிலையில், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் சனிக்கிழமை சரிபார்த்தனர். 

ஜம்மு பிரதேச ஆணையர் ரமேஷ் குமார் மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர் முகேஷ் சிங் ஆகியோர் தலைமையில் இன்று காலை 20 பாதுகாப்பு வாகனங்கள் ஜம்முவிலிருந்து காஷ்மீரின் நுழைவாயிலான பனிஹால் வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 

யாத்திரைக்காக ஜம்மு, உதம்பூர் மற்றும் ராம்பன் மாவட்டங்களில் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு பிரிவின் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சரிபார்த்துள்ளனர். 

43 நாள்கள் நீடிக்கும் அமர்நாத் யாத்திரை, தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள நுன்வான் மற்றும் பால்டால் ஆகிய இரட்டை வழிகளில் ஜூன் 30 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

யாத்ரீகர்களின் முதல் குழு பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து ஒரு நாள் முன்னதாக யாத்திரைக்குப் புறப்பட்டு ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பஹல்காம் மற்றும் பால்டலில் உள்ள அந்தந்த அடிப்படை முகாம்களை அடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.