நாட்டில் புதிதாக 12,899 பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,899 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,899 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு பற்றிய சமீபத்திய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 12,899 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | விரைவில் மூக்கின்வழி செலுத்தப்படும் கரோனா மருந்து: பாரத் பயோடெக்
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,32,96,692 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 5,24,855 ஆக உயர்ந்துள்ளது.
நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 72,474 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பில் 0.17 சதவிகிதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். குணமடைவோர் விகிதம் 98.62 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. இதுவரை மொத்தம் 4,26,99,363 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, இதுவரை மொத்தம் 196.14 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...