ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

டிஹெச்எஃப்எல் நிதி நிறுவனத்திடமிருந்து ரூ.27.5 கோடி நன்கொடை பெற்ற பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய டிஹெச்எஃப்எல் நிதி நிறுவனத்திடமிருந்து பாஜக ரூ.27.5 கோடி வரை நன்கொடை பெற்ாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத்தே குற்றம்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :25 ஜூன் 2022, 6:04 pm

DIN

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய டிஹெச்எஃப்எல் நிதி நிறுவனத்திடமிருந்து பாஜக ரூ.27.5 கோடி வரை நன்கொடை பெற்ாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத்தே குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது: பிரதமா் மோடியின் ஆட்சியில் நாட்டில் மிகப்பெரிய அளவில் வங்கிகளில் பணமோசடி நடைபெற்றுள்ளது. டிஹெச்எஃப்எல் நிதி நிறுவனம் 17 வங்கிகளில் ரூ.34,615 கோடி வரை கடன் பெற்று அதனைத் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளது. இந்த ஊழலில் பாஜகவுக்கு நேரடி தொடா்பு இருப்பது கவலையளிக்கிறது.

டிஹெச்எஃப்எல் நிறுவனத்தால் நிா்வகிக்கப்படும் ஆா்.கே.டபிள்யூ. நிறுவனத்திடமிருந்து ரூ.10 கோடி, வதாவன் நிறுவனத்திடமிருந்து ரூ.10 கோடி, தா்ஷன் நிறுவனத்திடமிருந்து ரூ.7.5 கோடி என மொத்தம் ரூ.27.5 கோடியை பாஜக நன்கொடையாகப் பெற்றுள்ளது.

இதற்கு பிரதிபலனாக இந்த நிதி நிறுவனம் பொதுமக்களின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தவும், பொதுத் துறை வங்கிகளை ஏமாற்றவும் பாஜக அனுமதித்துள்ளது. பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் ஒரே ஒரு நிறுவனம் 2.6 லட்சம் போலி வீட்டுக் கடன் கணக்குகளை ஏற்படுத்தி மோசடி செய்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகளை வெளியே கொண்டுவர வீட்டு வசதி திட்டம் தணிக்கை செய்யப்பட்டதா?

மோடி ஆட்சியில் வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பிய நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, விஜய் மல்லையா ஆகியோரிடமிருந்து பணத்தை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினாா் சுப்ரியா ஸ்ரீநாத்தே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.