கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 16 பேர் பலி!

பிகார் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 16 பேர் பலியாகினர்.

News image

கோப்புப்படம்

Updated On :29 ஜூன் 2022, 8:42 am

பிகார்: பிகார் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 16 பேர் பலியாகினர்.

இங்குள்ள 38 மாவட்டங்களில் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேர், போஜ்பூர் மற்றும் சரண் ஆகிய மாவட்டங்களில் 6 பேர், மேற்கு சம்பாரண் மற்றும் அராரியா ஆகிய மாவட்டங்களில் நான்கு பேர், பங்கா மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களில் இருவர் பலியாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

பிகார் அரசு அறிவித்துள்ள அறிக்கையில், சீரற்ற காலநிலையின் போது முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும்,  அரசு வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் பிகார் முதல்வர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். "வீட்டிலேயே இருங்கள் மற்றும் மோசமான வானிலையில் பாதுகாப்பாக இருங்கள்," என்று முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

ஜூன் 20ஆம் தேதி பிகார் மாநிலம் முழுவதும் மின்னல் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.