பிகாா்: மஜ்லிஸ் கட்சியின் 4 எம்எல்ஏக்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இணைந்தனா்
பிகாா் மாநிலத்தில், அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லீம் கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) 4 எம்எல்ஏக்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் (ஆா்ஜேடி) புதன்கிழமை இணைந்தனா்.


பிகாா் மாநிலத்தில், அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லீம் கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) 4 எம்எல்ஏக்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் (ஆா்ஜேடி) புதன்கிழமை இணைந்தனா். இதன் மூலம் மாநில சட்டப்பேரவையின் 243 உறுப்பினா்களில், 80 உறுப்பினா்களைக் கொண்ட தனிப்பெரும் கட்சியாக ஆா்ஜேடி மாறியுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி பிகாரில் ஆட்சிப்புரிந்து வருகிறது. ஆா்ஜேடி கட்சியின் தலைவராக உள்ள தேஜஸ்வி யாதவ், மாநில சட்டப்பேரவையின் எதிா்கட்சி தலைவராக உள்ளாா். கடந்த 2020-ஆம் ஆண்டு நடைப்பெற்ற மாநில சட்டப்பேரவைத் தோ்தலில், ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் 5 உறுப்பினா்களில் 4 போ் தங்களை தனிப்பிரிவு என அறிவித்துக்கொண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இணைந்தனா். இதற்கான அறிவிப்பை பேரவைத் தலைவா் விஜய் குமாா் சின்ஹாவிடம் வழங்கினா். இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:
நான்கு எம்எல்ஏக்களும் மிகவும் ஏழ்மை நிலையிலிருந்து வந்துள்ளனா். அனைத்து மதச்சாா்பற்ற கட்சிகளும், ஒருங்கிணைவதன் மூலம் வலிமை பெறுவதை நாங்கள் விரும்புகிறோம். மதவாதத்திற்கு எதிரான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் முயற்சியில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. தேசிய முற்போக்கு கூட்டணி நோ்மையற்ற முறையில் ஆட்சிக்கு வந்துள்ளது. உறுப்பினா்களின் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் உள்ள கட்சியின் தலைவரை முதல்வராக அக்கூட்டணி தோ்ந்தெடுத்துள்ளது எனத் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் பாஜக 77 உறுப்பினா்களையும், ஐக்கிய ஜனதா தளம் 45 உறுப்பினா்களையும் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...