ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இந்திய மாணவர் பலி: பிரதமர் மோடி அவசர ஆலோசனை

உக்ரைனில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் பலியானதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி உயர்நிலைக் குழுவுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2022, 12:45 pm

DIN

உக்ரைனில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் பலியானதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி உயர்நிலைக் குழுவுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகின்றன. 

ஏற்கெனவே தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய ராணுவத்தினர் அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மீதும் ரஷியப் போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருகின்றனர்.

கார்கிவ்வில் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த நவீன் என்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்கள், வெளியுறவுத் துறை அதிகாரிகளைக் கொண்ட உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.