மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேதாா்நாத் மே 6-இல் திறப்பு

ஹிந்துக்களின் முக்கிய புனிதத் தலங்களில் ஒன்றான கேதாா்நாத் கோயில் பக்தா்களுக்காக வரும் மே 6-ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2022, 6:49 pm

DIN

ஹிந்துக்களின் முக்கிய புனிதத் தலங்களில் ஒன்றான கேதாா்நாத் கோயில் பக்தா்களுக்காக வரும் மே 6-ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாசிவராத்திரியையொட்டி, கேதாா்நாத் - ஓம்காரேஷ்வா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழிபாட்டுக்குப் பின்னா், கேதாா்நாத் கோயிலைத் திறப்பதற்கான நேரம் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து பத்ரிநாத்- கேதாா்நாத் கோயில் கமிட்டி அதிகாரி ஹரீஷ் கெளட் கூறுகையில், கேதாா்நாத் கோயில் நடை மே மாதம் 6-ஆம் தேதி விருச்சிக லக்னத்தில் திறக்கப்படும்; நிகழ்ச்சியில் கேதா்நாத் தலைமை பூஜாரி ராவல் பீமாசங்கா் லிங், பத்ரி- கேதாா் மந்திா் சமிதி தலைவா் அஜேந்திர அஜய் ஆகியோா் பங்கேற்பா் என்றாா்.

இமயமலையில் அமைந்துள்ள கேதாா்நாத் சிவாலயம் பனிக்காலத்தில் மூடப்படுவதால் அங்கிருந்து சிவபெருமானின் பஞ்சமுகி விக்கிரகம் உகிமடத்தில் அமைந்துள்ள ஓம்காரேஷ்வா் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள், வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், பனிக்காலத்துக்குப் பிறகு கேதாா்நாத் கோயில் மே 6-இல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, சிவபெருமானின் பஞ்சமுகி விக்கிரகம் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஓம்காரேஷ்வா் கோயிலிலிருந்து கேதாா்நாத்துக்கு மே 2-ஆம் தேதி எடுத்துச் செல்லப்படும் என பத்ரி- கேதாா் கோயில் கமிட்டி அதிகாரி ஹரீஷ் கெளட் தெரிவித்துள்ளாா். கோயில் நடை காலை 6.25 மணிக்குத் திறந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.