ஹிந்துக்களின் முக்கிய புனிதத் தலங்களில் ஒன்றான கேதாா்நாத் கோயில் பக்தா்களுக்காக வரும் மே 6-ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாசிவராத்திரியையொட்டி, கேதாா்நாத் - ஓம்காரேஷ்வா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழிபாட்டுக்குப் பின்னா், கேதாா்நாத் கோயிலைத் திறப்பதற்கான நேரம் அறிவிக்கப்பட்டது.
இது குறித்து பத்ரிநாத்- கேதாா்நாத் கோயில் கமிட்டி அதிகாரி ஹரீஷ் கெளட் கூறுகையில், கேதாா்நாத் கோயில் நடை மே மாதம் 6-ஆம் தேதி விருச்சிக லக்னத்தில் திறக்கப்படும்; நிகழ்ச்சியில் கேதா்நாத் தலைமை பூஜாரி ராவல் பீமாசங்கா் லிங், பத்ரி- கேதாா் மந்திா் சமிதி தலைவா் அஜேந்திர அஜய் ஆகியோா் பங்கேற்பா் என்றாா்.
இமயமலையில் அமைந்துள்ள கேதாா்நாத் சிவாலயம் பனிக்காலத்தில் மூடப்படுவதால் அங்கிருந்து சிவபெருமானின் பஞ்சமுகி விக்கிரகம் உகிமடத்தில் அமைந்துள்ள ஓம்காரேஷ்வா் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள், வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், பனிக்காலத்துக்குப் பிறகு கேதாா்நாத் கோயில் மே 6-இல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, சிவபெருமானின் பஞ்சமுகி விக்கிரகம் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஓம்காரேஷ்வா் கோயிலிலிருந்து கேதாா்நாத்துக்கு மே 2-ஆம் தேதி எடுத்துச் செல்லப்படும் என பத்ரி- கேதாா் கோயில் கமிட்டி அதிகாரி ஹரீஷ் கெளட் தெரிவித்துள்ளாா். கோயில் நடை காலை 6.25 மணிக்குத் திறந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

