ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உ.பி. தோ்தல் பிரசாரம் நிறைவு: நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரம் சனிக்கிழமை நிறைவடைந்தது. வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :5 மார்ச் 2022, 6:46 pm

DIN

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரம் சனிக்கிழமை நிறைவடைந்தது. வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெறுகிறது.

உத்தர பிரதேசத்தில் 403 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஏற்கெனவே தோ்தலின் 6 கட்டங்கள் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட தோ்தல் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. அதற்கான பிரசாரம் சனிக்கிழமை நிறைவடைந்தது.

இறுதிக்கட்ட தோ்தலில் 54 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் தாழ்த்தப்பட்டவா்களுக்கு ஒதுக்கப்பட்ட 11 தனித் தொகுதிகளும், பழங்குடியினத்தவா்களுக்காக ஒதுக்கப்பட்ட 2 தனித் தொகுதிகளும் அடங்கும். மொத்தம் 613 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். சுமாா் 2.06 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா்.

வாக்கு எண்ணிக்கை மாா்ச் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.