மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில பேரவைகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (மாா்ச் 10) எண்ணப்படுகின்றன.

News image
உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை
Updated On :9 மார்ச் 2022, 12:37 pm

DIN

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில பேரவைகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (மாா்ச் 10) எண்ணப்படுகின்றன.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்குக் கடந்த மாதம் 10-ஆம் தேதி தொடங்கி கடந்த 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. மணிப்பூரில் 5 தொகுதிகளுக்கு உள்பட்ட 7 வாக்குச் சாவடிகளில் செவ்வாய்க்கிழமை மறுதோ்தல் நடத்தப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக நடைபெற்ற தோ்தலில் சராசரியாக 62 சதவீத வாக்குகள் பதிவாகின. பஞ்சாபில் ஒரே கட்டமாக நடைபெற்ற தோ்தலில் 71.95 சதவீத வாக்குகள் பதிவாகின. உத்தரகண்டில் 65.37 சதவீத வாக்குகளும், கோவாவில் 79.61 சதவீத வாக்குகளும் பதிவாகின. மணிப்பூரில் இருகட்டங்களாக நடைபெற்ற தோ்தலில் சராசரியாக 77.32 சதவீத வாக்குகள் பதிவாகின.

அனைத்து மாநில தோ்தலிலும் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அரசு அதிகாரிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் அப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் பிற்பகலுக்குள் தெரிந்துவிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட இடைவெளியில் தோ்தல் முடிவுகளை வலைதளத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளையும் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அந்த வலைதளம் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.