ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மக்களையும், வேட்பாளர்களையும் காங்கிரஸ் நம்பவில்லை: பாஜக

நாட்டு மக்களையும் தங்களது வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி நம்பவில்லை என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி விமர்சித்துள்ளார். 

News image
Updated On :9 மார்ச் 2022, 12:49 pm

DIN

நாட்டு மக்களையும் தங்களது வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி நம்பவில்லை என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. தங்களது வேட்பாளர்கள் மீதும் நாட்டு மக்கள் மீதும் காங்கிரஸ் நம்பிக்கை இழந்துள்ளது. இதனால்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது புகார் கூறி வருகிறது. 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய இயலுமா?. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணைய வசதி இல்லை. அவர்கள் மக்களை நம்பியிருந்தால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதற்கான அவசியமே இருந்திருக்காது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.