மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உ.பி. யில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு- சமாஜவாதி குற்றச்சாட்டு

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்படும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறுவதாக சமாஜவாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2022, 11:09 pm

DIN

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்படும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறுவதாக சமாஜவாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வெளியே சமாஜவாதி தொண்டா்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ட்விட்டரில் விடியோவுடன் கூடிய பதிவை சமாஜவாதி கட்சி புதன்கிழமை வெளியிட்டது. அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டுசென்றபோது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று அதிகாரி ஒருவா் ஒப்புக் கொள்வதாக காட்சிகள் உள்ளன.

மேலும், மாநிலத்தின் பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. யாருடைய உத்தரவின்பேரில் இது நடக்கிறது, முதல்வா் அலுவலகத்திலிருந்து அதிகாரிகளுக்கு அழுத்தம் தரப்படுகிா என்று சமாஜவாதி வெளியிட்ட பதிவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, வாராணசியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சென்ற லாரி இடைமறிக்கப்பட்டதாகவும் வாக்குகளை மாற்ற பாஜக முயற்சிப்பதாகவும் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியிருந்தாா். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு வெளியே ராணுவத்தினா் போல தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று தனது கட்சித் தொண்டா்களுக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

உத்தர பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற பேரவைத் தோ்தல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. வியாழக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

3 அதிகாரிகள் மீது நடவடிக்கை: இந்த விவகாரம் தொடா்பாக சமாஜவாதி அளித்த புகாரை விசாரித்த தோ்தல் ஆணையம், 3 அதிகாரிகள் தோ்தல் பணிகளில் இருந்து நீக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.