திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

நாளை (மார்ச்.10) வாக்கு எண்ணிக்கை: உபியில் மது விற்பனைக்குத் தடை

மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஒருநாள் மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:37 am

DIN

மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஒருநாள் மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை வெளியாகின்றன. இதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் முடிவுகளையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாதவண்ணம் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதும் 70 ஆயிரம் காவலர்களும், 245 துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளை மாநிலம் முழுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.