தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர்  தெரிவித்தனர்.

News image
Updated On :10 மார்ச் 2022, 12:33 pm

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர்  தெரிவித்தனர்.

தெற்கு காஷ்மீரில் உள்ள நைனா பட்போரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதையடுத்து தேடுதல் நடவடிக்கை துப்பாக்கிச்சூடாக மாறியது. இதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். 

கொல்லப்பட்ட தீவிரவாதியை அடையாளம் காணும் பணியில் பாதுகாப்புப் படையினர் குழு ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.