நவ்ஜோத் சிங் சித்து 6,750 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நவ்ஜோத் சிங் சித்து தோல்வியுற்றார். 
நவ்ஜோத் சிங் சித்து 6,750 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
Published on
Updated on
1 min read

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நவ்ஜோத் சிங் சித்து தோல்வியுற்றார். 

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கிறது. முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தோல்வியைத் தழுவியுள்ளனர். 

அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து 6,750 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஜீவன் ஜோத் கௌர் வெற்றி பெற்றுள்ளார். 

சிரோமணி அகாலி தளம் கட்சியின் பிக்ரம் சிங் மஜிதியா 14,408 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும் தான் போட்டியிட்ட சம்கௌர் சாஹிப் மற்றும் பதெளர்( Chamkaur Sahib and Bhadaur) ஆகிய 2 பேரவைத் தொகுதிகளிலும் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com